News January 29, 2026

செட்டிபாளையம் அருகே விபத்து: ஒருவர் பலி

image

சேலத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் பீளமேட்டில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று இவரது அக்கா ஆனந்தி என்பவரது வீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பழனிவேல், பின் பைக்கில் செட்டிபாளையம் – போத்தனூர் சாலையில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன் சென்ற லாரியின் ஓட்டுநர், திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் நிலைதடுமாறிய பழனிவேல், லாரியின் பின்புறத்தில் மோதி உயிரிழந்தார்.

Similar News

News February 1, 2026

கோவை: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

கோவை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க

News February 1, 2026

மருதமலை முருகன் பற்றி தெரியுமா?

image

மருதமலை முருகன் கோயில் முதல் முதலில் கொங்கு சோழர்களால் நிர்மாணிக்கப்பட்டது, விஜய நகர, கொங்கு சிற்றரசர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு இத்திருத்தல் உருவானது. மருதாசலம், மருதவரையான், மருதப்பன், மருதைய்யன் என்ற பெயர்களில், 9 ஆம் நூற்றாண்டிலேயே மக்களிடம் இந்த கோயில் அறியப்பட்டிருந்தது. பாம்பாட்டி சித்தர், இங்கு சில காலம் வசித்துள்ளார். தீமைகளை போக்கும் சர்வ வல்லமை, மருதமலை முருகனுக்கு உள்ளதாம்.

News February 1, 2026

கோவை: ரயில்வேயில் 22,195 பேருக்கு வேலை! APPLY NOW

image

கோவை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3-ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். ( மத்திய அரசு வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க)

error: Content is protected !!