News January 29, 2026
திருப்பத்தூரில் கோர விபத்து!

நாட்றம்பள்ளி அடுத்த குத்து பகுதியில் இன்று (ஜன.29) அதிகாலை 4 மணி அளவில் மண் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கொத்தூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (25) என்பவர் உயிரிழந்தார். மற்றொரு வாகன ஓட்டுனரான அருண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 16, 2026
திருப்பத்தூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

திருப்பத்தூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 16, 2026
திருப்பத்தூரில் கோரம்; உடல் சிதறி பலி!

பேரணாம்பட்டை சேர்ந்தவர் சாந்தா (76). இவர் மேல்பட்டி ரெயில் நிலையம் அருகே தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று வீட்டின் அருகே மேல்பட்டி ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அரித்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News February 16, 2026
திருப்பத்தூரில் மாணவன் தத்தளித்து பலி!

ஆம்பூரை அடுத்த உடைய ராஜபாளையத்தை சேர்ந்தவர் சாரதி (17). நேற்று வீட்டின் அருகே கட்டி வைத் திருந்த மாடு திடீரென மிரண்டு ஓடியது. மிரண்டு ஓடிய மாட்டை பிடிக்க சென்ற சாரதி அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் கிணற்றில் இறங்கி சாரதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


