News January 29, 2026
FLASH: ஆம்பூரில் பயங்கர விபத்து!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜன.29) அதிகாலை 5.30 மணிக்கு முன்னே சென்ற கார் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Similar News
News February 2, 2026
திருப்பத்தூர் அருகே துடிதுடித்து பலி

நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி ஊராட்சி டோல்கேட் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோவையில் இருந்து சென்னைக்கு கோழி இறைச்சி ஏற்றுக்கொண்டு சென்ற மினி வேன் எதிரே சென்ற லாரி மீது இடித்ததில் மினி வேனில் கிளீனராக வேலை செய்த கோவையைச் சேர்ந்த அசாருதீன் என்பவர் துடிதுடித்து உயிரிழந்தார். விபத்து குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 2, 2026
திருப்பத்தூர்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

திருப்பத்தூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <
News February 2, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (பிப்.1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


