News May 8, 2024

தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு அழைப்பு

image

மதுரை கே.புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் கட்டணத்துடன் கூடிய தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மே 13 முதல் 24 வரை நடக்கும் பயிற்சியில் சுத்த தங்கம் கணக்கிடும் முறை, உலோகவியல், கடன் தொகை வழங்கும் முறை, தங்கம் தரம் பார்த்தல் செய்முறை விளக்கம் அளிக்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள் 86956 46417 எண்ணில் முன்பதிவு செய்யலாம்

Similar News

News September 13, 2025

மதுரை: பிரபல தொழிலதிபர்கள் இடங்களில் ரெய்டு

image

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொழிலதிபர்கள் மணி (எ)முத்தையா மற்றும் மருது பாண்டியனுக்கு சொந்தமான எம்.வி.எம் நிறுவனங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இவர்கள் மீது சில ஆண்டுகளுக்கு முன் ‘இரிடியம்’ குறித்த பண மோசடி புகார் எழுந்தது. அடுத்தடுத்து புகார்கள் எழுந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று இங்கு சோதனையை நடத்தினர்.

News September 13, 2025

மதுரையில் கூகுள் மேப்பை பயன்படுத்தி கொள்ளை

image

வாடிப்பட்டி பகுதியில் அடுத்தடுத்துள்ள 4 கோயில்களில் ஆடிப்பெருக்கு அன்று இரவு உண்டியலை உடைத்து திருடிய சமயநல்லுார் ரூபன்31, சேகர் 22, வடகாடுபட்டி தமிழழகன்22 ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். 4 கிராம் தங்கம், ரூ.50,000 பறிமுதல் செய்யப்பட்டது. விக்கிரமங்கலம் பகுதியில் மதுஅருந்தும் இடத்தில் பழகி நண்பர்களான இவர்கள், விசேஷ நாட்களை நோட்டமிட்டு கூகுள் மேப்பில் கோவில்களை கண்டறிந்து திருடியது அம்பலமானது.

News September 13, 2025

ம.க.ஸ்டாலினை கொல்ல முயன்ற மூவர் மதுரையில் சரண்

image

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரும், தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளருமான ம.க.ஸ்டாலினை வெடிகுண்டுகளை வீசி கொல்ல முயன்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 3 பேர் மதுரை மதுரை மாவட்ட 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். சரணடைந்த விஜய் 27, ஆகாஷ் 30, மகாலிங்கம் 26 ஆகிய 3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

error: Content is protected !!