News January 28, 2026
திருப்பூரில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

திருப்பூர் தாராபுரத்தில் மிகவும் பழமையாம காடு ஹனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது. 1810 ஆண்டில் கோவை ஆட்சியராக இருந்த டீன்துரை, புற்றுநோய் குணமடைய, ஹனுமந்தராய சுவாமியை வேண்டியுள்ளார். அவ்வாறே நோயும் குணமடைந்ததாம். அதற்கு நன்றிக்கடனாக கோயில் கர்பகிரகத்தை, டீன்துரை பெரிதாக கட்டித்தந்தாராம். இத்தகையை சக்திவாயந்த ஹனுமந்தராய சுவாமியை, ஒரு முறை சென்று வணங்கினால், சர்வ தோஷம், நோய்களும் நிவர்த்தியடையுமாம்.
Similar News
News February 4, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (பிப்.04) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News February 4, 2026
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (பிப்.05) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சேவூர், ஆசநல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைப்புதூர், பாப்பாங்குளம், தண்ணீர்பந்தல் பாளையம், வடுகபாளையம், சென்னியாண்டவர்கோவில், வினோபா நகர், விராலிக்காடு, ராயர்பாளையம், தண்ணீர்பந்தல், திம்மணையாம்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News February 4, 2026
திருப்பூர்: ரயில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் ஊத்துக்குளி இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (16843) பிப் 6, 8, 10, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாற்றியமைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்படும். பணிகள் முடிந்த பின் அதே நிறுத்தங்களுடன் பாலக்காடு நோக்கிச் செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


