News May 8, 2024
கஞ்சா வழக்கு – சவுக்கு சங்கர் இன்று ஆஜர்

பெண் காவல்துறை அதிகாரிகளை தப்பாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார் முன்னாள் அரசு ஊழியரான சவுக்கு சங்கர்.
சங்கர் தேனியில் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டு, தனி வழக்காக பதிவு செய்யப்பட்டது.
அந்த கஞ்சா வழக்கிற்காக, இன்று, மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜராகிறார்.
Similar News
News January 14, 2026
மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வருகின்ற 15.1.2026 தேதி அன்று மதுரை மாநகர் அவனியாபுரம் – தி.குன்றம் சாலையில் பத்திரகாளி அம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் செல்லும், அனைத்து வாகனங்களும் அவனியாபுரம் பைபாஸ் – வெள்ளக்கல் வழியாக திருப்பரங்குன்றம் செல்ல வேண்டும் என போலீசார் அறிவித்துள்ளனர்.
News January 14, 2026
மதுரையில் இன்று இரவு ரோந்து போலீஸ் எண்கள்!

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (13.01.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
மதுரையில் நவீன மெய்நிகர் ஆய்வகம் உள்ள அரசுப் பள்ளி

மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் ஹெச்.டி.எப்.சி. வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்ட மெய்நிகர் ஆய்வகத்தை (virtual Lab) மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், MLA பூமிநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன் மாமன்ற உறுப்பினர், அதிகாரிகள் பங்கேற்றனர். *ஷேர் பண்ணுங்க.


