News January 28, 2026
தூத்துக்குடியில் ரூ.900 கோடி வர்த்தகம் பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்டதால் பயனாளர்கள் மிகவும் அவதி அடையடைந்தனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் ரூ.900 கோடி பணபரிவர்த்தனை நடைபெறும் நிலையில் நேற்று இவை முழுமையாக பாதிக்கப்பட்டது.
Similar News
News February 19, 2026
திருச்செந்தூர் கொடியேற்றம் தேதி அறிவிப்பு…!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா வரும் 21ம் தேதி வெகு விமர்சையாக தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
News February 19, 2026
BREAKING தூத்துக்குடிக்கு மஞ்சள் அலர்ட்…!

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக நாளை மறுதினம் (பிப்.21) தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE!
News February 19, 2026
தூத்துக்குடி: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

தற்போது உள்ள டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. இதில் தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!


