News January 28, 2026

வேலூர் அருகே கோர விபத்து!

image

அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (31), கட்டிட மேஸ்திரி. இவர் தனது வீட்டின் மாடியில் வைத்துள்ள இரும்பு பொருட்களை எடுத்து கொண்டு கீழே வந்தார். அங்கிருந்த மின் கம்பி மீது இரும்பு கம்பி உரசியது. அப்போது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து ராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 13, 2026

வேலூரில் தூக்கில் தொங்கிய வாலிபர்!

image

கன்னிகாபுரத்தை சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் ராம் பிரகாஷ் (25). இவர் 2022-ல் ஜெயலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இரு தினங்களுக்கு முன் இவர் போதையில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பின் பிரகாஷுக்கு அவரது நண்பர் போன் செய்தும் எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது பிரகாஷ் தூக்கில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 13, 2026

வேலூரில் துடிதுடித்து பலி!

image

கீழ்வடுகன்குட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சதீஷ்குமார் (35). இவர் நேற்று மாலை தனது மாமனார் கோபியுடன் (62) பைக்கில் லத்தேரிக்கு சென்றனர். அப்போது பைக் நிலை தடுமாறி புளியமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 13, 2026

ஓடும் ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம்

image

அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை மலை பகுதி முத்தனூர் கிராமத்தை சேந்தவர் அப்பாவு, கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியா, நிறைமாத கர்ப்பிணி. பிரசவ வலியில் நேற்று துடித்த பிரியாவை வேலூர் பெண்ட்லென்ட் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு வந்தனர். அப்போது ஓடும் ஆம்புலன்சிலேயே பிரியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயும், சேயும் வேலூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.

error: Content is protected !!