News January 28, 2026
பந்தலூர் அருகே பாம்பால் பரபரப்பு

பந்தலூர், அய்யங்கொல்லி பிரதான சாலையில் கொடிய விஷமுள்ள நாகபாம்பு ஒன்று படம் எடுத்து நின்றது. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், லாவகமாகப் பாம்பைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். அதன் பின்னரே போக்குவரத்து சீரானது.
Similar News
News January 30, 2026
நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி 1ம் தேதி வள்ளலார் ராமலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு, அன்றைய தினம் மதுக்கடைகள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நாளில் மதுபான கடைகள், கிளப் பார்கள், ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்படுகிறது. சட்ட விரோதமாக பார்கள் செயல்படும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. மது விற்பனை குறித்து புகார் அளிக்க 0423-2223802.
News January 30, 2026
நீலகிரி: SBI வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

நீலகிரி மக்களே, SBI வங்கியில் 2050 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த தகுதி வாய்ந்த 21 முதல் 30 வயதுடையவர்கள் <
News January 30, 2026
BREAKING: கோத்தகிரி பெண் உயிரிழப்பு

கோத்தகிரி அரவேணுவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதையாத்திரையாக பழனிமலை கோயிலுக்கு நேற்றிரவு மேட்டுப்பாளையம் வழியாக சென்றுள்ளனர். மீனாட்சி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அசுர வேகத்தில் பின்னால் வந்த பைக் மோதியதில் நளினி என்ற பெண் பக்தர் படுகாயமடைந்தார். அவர் மேட்டுப்பாளையம் GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


