News January 28, 2026
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பகுதி நேர வேலை வாய்ப்பு என, பொதுமக்கள் தங்களது அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இதன் மூலம் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அல்லது உங்களிடமிருந்து பணம் பறிக்க வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையுடன் இருக்கும் படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
Similar News
News February 12, 2026
மயிலாடுதுறை: சட்டவிரோத மது விற்றவர் கைது!

பாலையூர் காவல் சரகம் கோனேரிராஜபுரம் பகுதியில் சட்டவிரோதமாக புதுச்சேரி மதுபானம் விற்கப்படுவதாக போலீசார் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கோனேரிராஜபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுதாகரன் (29) என்பவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் பாண்டி சாராயத்தை பறிமுதல் செய்து சுதாகரனை போலீசார் கைது செய்தனர்.
News February 12, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (பிப்.11) இரவு 10 மணி முதல் நாளை (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 12, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (பிப்.11) இரவு 10 மணி முதல் நாளை (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


