News January 27, 2026
கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் ஜனவரி 30 ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அறிவித்துள்ளார். இந்த விவசாயிகள் துறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளதாகவும், இதில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 7, 2026
கள்ளக்குறிச்சி: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News February 7, 2026
திருக்கோவிலூர் நபரால் பதறிய கள்ளக்குறிச்சி!

திருக்கோவிலூரைச் சேர்ந்த குப்பன் என்பவர் பிப்ரவரி 6-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமேகலை அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் குப்பன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
News February 7, 2026
கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

கள்ளக்குறிச்சி அருகே பெரியசிறுவத்துாரைச் சேர்ந்த அஞ்சலி (27) என்பவருக்கு, கடந்த 2023-ல் பிரகாஷ் என்பவருடன் திருமணமாகி ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், ஏற்கனவே வரதட்சணை அளிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ரூ. 2 லட்சம் பணம் கேட்டு பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அஞ்சலியை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், கணவர் பிரகாஷ் உட்பட 5 பேர் மீது 2 போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


