News January 27, 2026
கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட
மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் குடியரசு தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் குடிநீர் மிகவும் அசுத்தமாக வருவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தினர்.
Similar News
News February 9, 2026
செங்கல்பட்டு அருகே தூக்கில் தொங்கிய கணவன்!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (34), இவர் குடும்பத்து டன் காட்டாங்கொளத்தூரில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கண்ணதாசன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி திட்டி தீர்த்துள்ளார். மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News February 9, 2026
செங்கல்பட்டு: தறிகெட்டு ஓடிய பைக்; துடிதுடித்து பலி!

சோழிங்கநல்லூர் வில்லேஜ் சாலையை சேர்ந்தவர் டில்லி பாபு (24). இவர் நேற்று காலை பைக்கில் கோவளத்தில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி தாறு மாறாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது முட்டுக்காடு பகுதியை கடந்து சென்ற போது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த டில்லி பாபு துடிதுடித்து உயிரிழந்தார். பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 9, 2026
செங்கல்பட்டு இன்று இரவு வெளியே செல்வோர் கவனத்திற்கு

செங்கல்பட்டு இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


