News January 27, 2026
கிருஷ்ணகிரியில் மூதாட்டி திடீர் மரணம்!

ஓசூர் அடுத்த அன்னை சத்யா நகர் பகுதியில் சேர்ந்தவர் சரோஜா 60. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று (ஜன.26) வீட்டில் இருந்து வெளியே சென்ற போது திடிரென மூக்கண்டப்பள்ளி சாலையில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து போது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 9, 2026
கிருஷ்ணகிரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

கிருஷ்ணகிரியில் மாவட்டத்துக்குட்பட்ட பென்னேஸ்வரம் மற்றும் பர்கூர் துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (பிப்.9) காலை 9 முதல் 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி பார்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, கரகுப்பம் மற்றும் காவேரிப்பட்டணம், தள்ளிஹல்லி, பென்னேஸ்வரம் மடம் சுற்று வட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும். SHARE IT!
News February 9, 2026
கிருஷ்ணகிரி: கழுத்து அறுத்து கொடூர கொலை!

வேப்பனப்பள்ளியை சேர்ந்த மூதாட்டி சின்னம்மா (70). இவர் நேற்று (பிப்.8) மாலை கிராமத்தின் அருகே உள்ள செங்கல் சூளையில் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவரது காதுகளை வெட்டப்பட்டு, இரண்டு தங்க நகைகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதயடுத்து ஆந்திர மாநிலம் குடிப்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 9, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்ட அதன் சுற்றுவட்ட உள்ள பகுதிகளில் இரவு ரோந்து பணிக்கான காவலர்களின் விவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதன்படி அப்பகுதிகளில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் காவல்துறையினரை அழைப்பதற்கு வசதியாக அவர்களின் அலைபேசி எண்கள் ஒடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதனை பொதுமக்கள் அறிந்துகொண்டு பிரச்சனைகள் ஏதாவது ஏற்பட்டால் அதை தவிர்க்க காவல்துறையினரை அழைக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஷேர்!


