News January 27, 2026

புதுகை: குடியரசு தினத்தன்று சட்டவிரோத செயல் – 2 பேர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் நேற்று மதுபான பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் காவல்துணை கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில் அறந்தாங்கி காவல் ஆய்வாளர் செந்தூரபாண்டியன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் பாரில் பதிக்கி வைக்கப்பட்டிருந்த 104 மது பாட்டில்களை, பறிமுதல் செய்து விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர்.

Similar News

News February 3, 2026

புதுகை: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<> ‘Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 3, 2026

புதுகை: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு உழவன் <>App <<>>மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

News February 3, 2026

புதுக்கோட்டை: நூதன முறையில் பணம் அபேஸ்!

image

ஆலங்குடியைச் சேர்ந்த தனசேகரன் (35) என்பவரை கடந்த ஜன.29-ம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் பிரபல தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, நகைக்கடன் குறித்து கேட்டு 16 இலக்க எண், OTPயை கேட்டுள்ளார். அதன் பேரில் இவரும் கூறியுள்ளார். பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.4.70 லட்சம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சடைந்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி யிடம் புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!