News January 27, 2026

உரிமைத் தொகை உயர்வு.. CM ஸ்டாலின் ஹேப்பி நியூஸ்

image

சென்னையில் இன்று & நாளை நடைபெறும் உலக மகளிர் உச்சி மாநாட்டை, CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்த அறிவிப்பை CM வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, ₹1,000 உரிமைத் தொகை உயர்த்தப்படும் என ஸ்டாலின் கூறியிருந்தார். அதேநேரம், வரும் தேர்தலில் மகளிர் வாக்குகளை கவரும் வகையில் வாக்குறுதிகளை திமுக தயார் செய்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Similar News

News February 3, 2026

தென்காசி: இனி அடிக்கடி EB ஆபீஸ் அலைய வேண்டாம்!

image

தென்காசி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <>கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். (அ) 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News February 3, 2026

தவறாக தொட்டவனை பளாரென அடித்த நடிகை ரேவதி

image

பள்ளிப் பருவத்தில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து நடிகை ரேவதி மனம் திறந்துள்ளார். அதில், 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, தன்னை பஸ்ஸில் ஒருவன் தவறாக தொட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த இடத்திலேயே அவனை பளாரென அடித்ததாகவும், அங்கிருந்தவர்கள் அனைவரும் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறுவயதில் அம்மா கொடுத்த தைரியத்தாலேயே இப்படி செய்ததாகவும் ரேவதி கூறியுள்ளார்.

News February 3, 2026

விரைவில் களமிறங்கும் CSK மகளிர் படை..!

image

மகளிர் அணியை வாங்குவதே தங்களது அடுத்த இலக்கு என CSK அணியின் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 5 சாம்பியன் பட்டங்களுடன் வெற்றிகரமான அணியாக CSK உள்ளது. எனினும் WPL தொடரில் இன்னும் பங்கேற்காமல் விலகியே உள்ளது. இந்நிலையில் உடனடியாக இல்லாவிட்டாலும், வரும் ஆண்டுகளில் நிச்சயமாக மகளிர் அணி உருவாகும் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது CSK ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

error: Content is protected !!