News January 27, 2026
பத்திரப்பதிவில் வந்த புதிய மாற்றங்கள்!

பத்திரப்பதிவு செய்யும் போது, சொத்தின் அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற TN அரசின் மசோதாவிற்கு ஜனாதிபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். சொத்தில் உரிமை பெற பயன்படுத்தப்பட்ட முந்தைய மூல ஆவணத்தையும், வில்லங்க சான்றிதழை இனி கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். மூல ஆவணம் இல்லையென்றால், பட்டா சமர்பிக்க வேண்டும். மேலும், சொத்தில் அடமானம் இருந்தால், அடமான உரிமையாளரின் NOC சான்றிதழ் இல்லாமல் பதிவு முடியாது.
Similar News
News January 30, 2026
திருப்பதியில் முத்தம்.. மன்னிப்பு கேட்ட தம்பதி

திருப்பதியில் <<18991211>>போட்டோஷூட் <<>>எடுத்தபோது, முத்தமிட்ட திருவண்ணாமலையை சேர்ந்த திருமால், காயத்ரி தம்பதி தற்போது மன்னிப்பு கேட்டுள்ளனர். திருப்பதியில் போட்டோ, வீடியோ எடுப்பது தவறு என்று தெரியாது எனவும் அந்த போட்டோ & வீடியோக்களை டெலிட் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அனைத்து பக்தர்களிடமும் மன்னிப்பு கேட்பதாக கூறிய அவர்கள், பரிகாரமாக திருப்பதியில் சேவை செய்ய தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
News January 30, 2026
தமிழக வாக்காளர் பட்டியல்: அவகாசம் நீட்டிப்பு

2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் SIR பணிகள் முடிக்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இன்றுவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், SC உத்தரவின்பேரில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பிப்.9 வரை அவகாசத்தை நீட்டித்து ECI அறிவித்துள்ளது.
News January 30, 2026
என்னது.. குறட்டை விட்டால் Heart Attack வருமா!

நாம் சாதாரணமாக நினைக்கும் குறட்டை, இதய ஆரோக்கியத்திற்கான எச்சரிக்கை மணியாக இருக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். தூக்கத்தின்போது காற்றுப்பாதை அடைபட்டு, சுவாசிக்க முடியாமல் போவதால் குறட்டை ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, காலப்போக்கில் இதயம் பாதிப்படையும். இது நீண்ட நாள்களுக்கு தொடர்ந்தால் இதய செயலிழப்புக்கு கூட வழிவகுக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.


