News January 27, 2026
தி.மலை: நடுரோட்டில் தீ பிடித்து எரிந்த கார்!

தி.மலை மாவட்டம் ஆரணியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீ பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போளூர் பகுதியை சேர்ந்த 4 பேர் ஆரணி- சேத்துப்பட்டு சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த போது என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு 4 பேரும் தப்பிய நிலையில், கார் மளமளவென தீ பிடித்து எரிந்து எலும்புகூடானது. இதனால் அங்கு ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது.
Similar News
News February 8, 2026
பர்வதமலை ஏற கடும் கட்டுப்பாடு- அது என்னென்ன?

தி.மலை மாவட்டத்தில் உள்ள பருவதமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 1) பக்தர்கள் காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதி. 2) 18 -60 வயதுடையோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 3) ஒரு நாளைக்கு தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 800 பேருக்கு அனுமதி. 4) வரும் முன் ஆன்லைனில் விண்ணப்பிப்பது கட்டாயம்.
News February 8, 2026
தி.மலை: மளமளவென காட்டுக்குள் பரவிய தீ!

ஆரணி அருகே வெட்டியாந்தொழவம் கிராம வனப்பகுதியில் நேற்று இரவு மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதால் காட்டுத் தீ பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்திற்கு காரணமான மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News February 8, 2026
தி.மலை: மளமளவென காட்டுக்குள் பரவிய தீ!

ஆரணி அருகே வெட்டியாந்தொழவம் கிராம வனப்பகுதியில் நேற்று இரவு மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதால் காட்டுத் தீ பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்திற்கு காரணமான மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


