News January 27, 2026

உடுமலை அருகே கத்திக்குத்து சம்பவம்!

image

உடுமலை அருகே பெரிய வாளவாடியை சேர்த்தவர் வெள்ளியங்கிரி. இவரின் மனைவி உடன்  விஜய் என்பவர் பேசுவதை வெள்ளிங்கிரி கண்டித்தால் மனைவி தாய் வீட்டுக்கு சென்றார். ஆத்திரமடைந்த வெள்ளிங்கிரி விஜயுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது விஜய் வைத்திருந்த கத்தியால் குத்தியதாக தெரிகிறது இதில் படுகாயம் அடைந்த வெள்ளிங்கிரி  உடுமலை GH-ல் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தளி காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

Similar News

News February 8, 2026

பல்லடம் அருகே துணிகர சம்பவம்!

image

பல்லடம் சித்தம்பலம் பகுதியில் தனியார் கோழிப்பண்ணை ஊழியர் யூஜின் – ஆசிரியை ஜோதா தம்பதியினர் வேலைக்குச் சென்ற நேரத்தில், வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் திருடப்பட்டன. கண்காணிப்பு கேமராவை துணியால் மறைத்து மர்ம நபர்கள் இந்த துணிகரத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 8, 2026

திருப்பூரில் வசமாக சிக்கிய பெண்

image

திருப்பூர் தெற்கு போலீசார் பூ மார்க்கெட் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அங்கேரிபாளையம், அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்த சர்மிளா(49) என்பதும் அவர் அந்த பகுதியில் கேரளா லாட்டரி விற்றதும் தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த 10 கேரளா லாட்டரியை பறிமுதல் செய்தனர்.

News February 7, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (பிப்.07) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

error: Content is protected !!