News May 7, 2024
ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராக ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வளிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய அவர், “ரோஹித் சோர்வுற்று இருப்பதாக நினைக்கிறேன். சிறிது ஓய்வு அவருக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும். ஆனால், MI அணியின் முக்கிய வீரராக இருப்பதால், அவருக்கு ஓய்வு கிடைக்குமா எனத் தெரியவில்லை” எனக் கூறினார்.
Similar News
News September 5, 2025
அனைவரையும் கவர்ந்த தமிழ் சினிமா டீச்சர்கள்

ஆசிரியர்கள் தினமான இன்று (செப்.5) தங்களுக்கு பிடித்த டீச்சர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது, கிஃப்ட் கொடுப்பது என அனைவரும் கொண்டாடி தீர்ப்பர். ஆனால் இந்த கொண்டாட்டங்கள் Off-Screen-ல் மட்டும் தான் இருக்க வேண்டுமா என கேட்டால் இல்லை. சினிமாக்களில் On-Screen-ல் வரும் சில ஆசிரியர்களும் நமது வாழ்வில் சொல்லத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பர். அதில் உங்களுக்கு பிடிச்ச டீச்சர் யார்? சொல்லுங்க…
News September 5, 2025
BREAKING: ஒன்றுபடுவோம்; வென்று காட்டுவோம்: சசிகலா

செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்பதை அவர் நிரூபித்துள்ளதாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், அதிமுக எந்த சக்தியாலும் அழிக்க முடியாத பேரியக்கம் எனவும், ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம், நாளை நமதே என்றும் அதிரடி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, அதிமுகவுக்கு கஷ்டங்கள் ஏற்பட்ட காலங்களில் செங்கோட்டையன், வலிமையோடு எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News September 5, 2025
ஏன் ஓணம் கொண்டாடுகிறோம் தெரியுமா?

மஹாபலி என்ற அசுரராஜா, நீதியாலும் அன்பாலும் மக்களை ஆட்சி செய்தார். அவரது புகழால் பொறாமைப்பட்ட தேவர்கள், விஷ்ணுவை வேண்டினர். விஷ்ணு வாமனராக விஸ்வரூபம் எடுத்து, மஹாபலியிடம் 3 அடியளவு நிலம் கேட்டார். முதல் அடியில் பூமி, 2-ம் அடியில் விண்ணையும், 3-ம் அடிக்கு தன்னையே ஒப்படைத்து தலையை மஹாபலி கொடுத்து, பாதாளத்திற்கு சென்றார். அவர் பாதாளத்தில் இருந்து பூமிக்கு வரும் நாளை ஓணமாக கொண்டாடுகின்றனர். SHARE IT.