News January 26, 2026
வேலூரில் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (0416-2220893) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 8, 2026
வேலூர்: தலையோடு பொருத்தி சோதனை; காத்திருந்த அதிர்ச்சி!

பேரணாம்பட்டு, சாத்கர் மலையில் 2 மாதங்களுக்கு முன்பு 3 காட்டுயானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதில் 1 யானையின் தந்தங்கள் உருவப்பட்டு இருந்ததை அடுத்து வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் ஆந்திரா அருகே சித்தூரில் மறைத்து வைக்கப்பட்ட 2 யானை தந்தங்களை வனத்துறையினர் கைப்பற்றினர். இதில் சந்திரபாபு (47) பி.சந்திரபாபு (42) ஆகியாரை கைது செய்து மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
News February 8, 2026
வேலூரில் துணிகர சம்பவம்!

வேலூர் அடுத்த பள்ள இடையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமணி (47). இவர் இவர் நேற்று (பிப்.7) ஒசூரில் படிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றார். அப்போது வேலூர் பெண்கள் சிறை அருகே வந்தபோது பின்னால் பைக்கில் வந்த 2 பேர் திடீரென ரமணியின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News February 8, 2026
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு முதல் இன்று (பிப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


