News January 26, 2026
வேலூரில் அதிகாரிகள் திடீர் ஆய்வு!

வேலூர் மாநகராட்சியினர் நேற்று (ஜன.25) நகரின் பல பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் 300 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. விதிமீறலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களிடம் மொத்தம் ரூ.27,600 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகள் நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News February 9, 2026
வேலூரில் EB பில் எகுறுதா..?

வேலூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<
News February 9, 2026
வேலூர்: கடைக்கு சென்றவருக்கு அடி உதை!

சித்தூர்கேடை சேர்ந்த அக்பர் பாஷா கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த இஸ்மாயில் கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டார். யதார்த்தமாக அக்பர் வீட்டுக்கு போன் செய்வதை, சண்டைக்கு ஆள் சேர்கிறார் என தவறாக நினைத்த இஸ்மாயில், அக்பரை பீர் பாட்டிலால் அடித்து உள்ளார்.இதில் காயமடைந்த அக்பர்பாஷா குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில் இஸ்மாயில், ஆஜாம் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
News February 9, 2026
வேலூர்: கொளுந்து விட்டு எறிந்து விபத்து!

வேலூர் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). இவர் அதே பகுதியில் ஊதுபத்தி கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று (பிப்.8) அதிகாலை திடீரென குச்சிகள் வைத்திருந்த மூட்டைகள் தீப்பற்றி எரிந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதையடுத்து செந்தில்குமார், முன்விரோதம் காரணமாக தொழிற்சாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பதாக விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளித்தார்.


