News January 26, 2026
விழுப்புரம் அருகே மடக்கி பிடித்த காவல்துறையினர்!

விக்கிரவாண்டி அருகே பனையபுரம் கூட்டுரோட்டில் கனிம வளத்துறை அதிகாரி சுரேஷ்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் சிவானந்தம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து நடத்திய சோதனையில் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 19, 2026
விழுப்புரம் கலெக்டர் அறிவித்தார்!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நாளை(பிப்.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் மாவட்டத்தை சேர்ந்த 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பிடெக் போன்ற கல்வித் தகுதி உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 19, 2026
விழுப்புரம்: துப்பாக்கியை ஒப்படைக்க அறிவுறுத்தல்!

தமிழக சட்டசபை தேர்தல் 2026 முன்னிட்டு விரைவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த உள்ளது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உரிமை பெற்ற படைக்கலன்களை (துப்பாக்கிகளை) வைத்திருப்பவர்கள் தங்களின் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் உடனே ஒப்படைக்க வேண்டுமென மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
News February 19, 2026
விழுப்புரத்தில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா..? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா..? கவலை வேண்டாம். அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


