News January 26, 2026
தூத்துக்குடி: மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்செந்தூரில் நடைபெற உள்ளது. வருகின்ற ஜனவரி 31.ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை மூன்று மணிக்கு வரை திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
Similar News
News February 7, 2026
தூத்துக்குடி: அரசு அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால்..!

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தூத்துக்குடி மாவட்ட மக்கள் 0461-2271143 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 7, 2026
தூத்துக்குடி: பள்ளி மாணவன் பரிதாபமாக பலி

தூத்துக்குடி டவுண் தனியார் பள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்றிரவு திரும்பிக் கொண்டிருந்தபோது வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் பேருந்தின் பின் கதவு எதிர்பாராத விதமாக திறந்தது. படிக்கட்டு வழியாக 9ம் வகுப்பு மாணவன் நவீன் குமார் என்பவர் கீழே விழுந்ததில் பின்னால் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வள்ளியூர் போலீஸ் விசாரணை.
News February 7, 2026
தூத்துக்குடி துறைமுகத்தில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு தொடக்கம்

தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக மேம்படுத்தப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனுமதி இல்லா ட்ரான்களை கண்டறிந்து அதனை செயலிழக்க செய்யும் வகையில் இந்த அமைப்பு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறை என்பதால் இந்த பெருமை தூத்துக்குடியைச் சாரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


