News May 7, 2024
திருவாரூர்: மணல் திருடிய ஆறு பேர் கைது

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பைக்கில் மணல் திருடிய கூத்தாநல்லூரை சேர்ந்த முரளிதாஸ், சரண்ராஜ், செங்குட்டுவன், தினேஷ் குமார் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 30, 2026
திருவாரூர்: என் ஊர் என் கனவு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட “என் ஊர் என் கனவு” திட்டத்தின் கீழ், District Vision 2030 – Strategy & Action Plan தயாரிக்க பொதுமக்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட https://forms.gle/n73s9UkiDxpQdp7r5 மூலம் அல்லது மாவட்ட ஆட்சியரக புள்ளியியல் துறை அலுவலகத்தில் நேரடியாகவும் சமர்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் (04.02.2026) என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
திருவாரூர்: மின்தடை அறிவிப்பு

திருவாரூர், வருகிற 31ஆம் தேதி அன்று மன்னார்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மன்னார்குடி நகரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, காரிக்கோட்டை, செருமங்கலம் சுந்தரக்கோட்டை,மூவாநல்லூர், நாவல்பூண்டி,பாமணி. கர்ணாவூர்,சித்தேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
News January 30, 2026
திருவாரூர்: விவசாயிகள் குறைதீர் முகாம் அறிவிப்பு

திருவாரூர், ஜனவரி 2026 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டமைப்பு வருகின்ற (ஜனவரி 30) வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளதால், இதில் விவசாயத் தோட்டக்கலை துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகார்களை மனுவாக அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


