News January 26, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.25) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 4, 2026
காஞ்சிபுரத்தில் குடிநீரின்றி தவிக்கும் மக்கள்!

மேற்கு ராஜ வீதியில், கச்சபேஸ்வரர் கோயில் அருகே நிலத்தடி பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு நாள் முழுக்க குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், மண் அரிப்பால் சாலையும் சேதமடைந்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, இந்த உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
News February 4, 2026
காஞ்சிபுரத்தில் பயங்கர தகராறு!

படப்பை அடுத்த காவனூர் ஊராட்சி, திருத்துவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் அபினாஷ்(25). இவர், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரின் நண்பர் பிபின்(33), பஞ்சர் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இருவரும் கூத்தனூரில் உள்ள பஞ்சர் கடையில் இருந்தனர். அப்போது, பைக்கில் வந்தவர்கள் இருவரிடமும் தகராறு செய்தனர். சராமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில், பிபின், அபினாஷ் படுகாயமடைந்தனர்.
News February 4, 2026
உத்திரமேரூரில் 2 வாலிபர்கள் துடிதுடித்து பலி!

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலன்(17), கதிரவன்(23). செந்தூரப்பாண்டி(15). நேற்று முன் தினம், மூவரும் திருவிழா காண சென்று விட்டு பைக்கில் வயலூர் திரும்பினர். அப்போது பெருநகர் மானாமதி சாலையில் தடுப்புக் கம்பியில் பைக் மோதியது. இதில், படுகாயமடைந்த மூவரும் பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது பாலன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், நேற்று(பிப்.3) கதிரவனும் உயிரிழந்தார்.


