News January 25, 2026
திருத்தணியைச் சேர்ந்தவருக்கு பத்மஸ்ரீ விருது

திருத்தணி சுவாமிநாதன் (76) ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகத் தேவாரத் திருமுறைகளைப் பாடிவரும் மூத்த ஓதுவார் ஆவார். தருமபுர ஆதீனப் பள்ளியில் மாணவர்களுக்குத் தேவாரப் பாடல்களைக் கற்பித்து வரும் இவர், மதுரை சோமுவின் இசையால் ஈர்க்கப்பட்டு இப்பணியில் ஈடுபட்டுள்ளார். ஓதுவார் நலச்சங்கம், பக்தஜன சபை போன்ற அமைப்புகளில் தேவாரத் திருவாசக இன்னிசை நிகழ்ச்சிகளை நடத்தும். இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News February 2, 2026
திருவள்ளூர்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

திருவள்ளூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 2, 2026
திருவள்ளூரில் 4 பேர் மீது குண்டாஸ்!

மணவாள நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன்(32) தனது நண்பர்களான சுகுமார்(31), கேசவ மூர்த்தி(25) ஆகியோருடன் கடந்த ஜன.16ஆம் தேதி ஆந்திரா மாநிலம், கோனே நீர் வீழ்ச்சிக்கு சென்று விட்டு பைக்கில் திரும்பினர். அப்போது கஞ்சா போதை கும்பலுடன் ஏற்பட்ட தகராறில், பார்த்திபன், சுகுமார் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட ஜவகர்(24), வினோத்(36), ஜோதிஷ்(34), நீலகண்டன்(31) ஆகியோர் மீது குண்டாஸ் பாய்ந்தது.
News February 2, 2026
கும்மிடிப்பூண்டி; நண்பரின் மனைவியுடன் பாலியல் சீண்டல்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆட்டோ டிரைவர் ஒருவர் மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ஆட்டோ டிரைவரின் நண்பர் நவீன்(27), வீட்டில் தனியாக இருந்த ஆட்டோ டிரைவரின் மனைவியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றுள்ளார். இதுகுறித்த புகாரில், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார் நவின் மீது வழக்கு பதி செய்து, அவரைக் கைது செய்தனர்.


