News May 7, 2024

ஆதித்யநாத் அரசு அராஜகம் செய்கிறது

image

உத்தர பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்களை வாக்களிக்கவிடாமல், ஆதித்யநாத் அரசின் போலீசார் அராஜகம் செய்வதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “தேர்தல் ஆணையமும், உ.பி., தலைமைத் தேர்தல் அதிகாரியும் இதை பார்த்தார்களா? இல்லையா? நடப்பவை அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கும் மக்கள், பாஜகவுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News August 21, 2025

ED ரெய்டால் DMK – BJP கூட்டணி அமையலாம்: அருண்ராஜ்

image

திமுகவை உருவாக்கிய அண்ணா, கடனில் வாழ்ந்து தனது கடைசி மூச்சை விட்டார் என கூறிய அருண்ராஜ், திமுகவின் தற்போதைய தலைவர்கள் ஊழலில் வாழ்வதாக கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை மாநாட்டில் பேசிய அவர், பிளவுவாத அரசியலை செய்யும் திமுக அரசு மக்களை ஏமாற்றி நாடகம் நடத்துகிறது என்றார். மேலும், TN-ல் அடுத்து ED ரெய்டு நடந்தால் பயந்துபோய் திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் அமைக்கும் என்றார். உங்கள் கருத்து?

News August 21, 2025

மதுரையில் போட்டியிடுகிறேன்… மாநாட்டில் விஜய் பேச்சு!

image

மதுரை மாநாட்டில் பரபரப்பாக பேசிய விஜய், தவெக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதாகக் கூறி கூட்டத்தை அதிர வைத்தார். தான் மதுரையில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்த உடனே, தொண்டர்கள் ஆரவாரத்தில் ஆர்ப்பரித்தனர். இதனை அடுத்து, மதுரையின் அனைத்து தொகுதிகளையும் கூறி, அனைத்திலும் விஜய் தான் போட்டி என்றார். அனைத்து தொகுதியிலும் விஜய் போட்டியிடுகிறார் எனக் கருதி வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

News August 21, 2025

ஓசி என ஏளனம் செய்யும் திமுக அமைச்சர்கள்: CTR நிர்மல்

image

விஜய்க்கு அனுபவம் இல்லை எனக் கூறும் திமுக அமைச்சர்கள் மக்களை ஓசி என ஏளனம் செய்வதாக CTR நிர்மல்குமார் கூறியுள்ளார். நேர்மையானவர்களை அரசியலில் நுழைய விடாமல் திராவிட கட்சிகள் மக்களை சுரண்ட நினைப்பதாக கடுமையாக விளாசிய அவர், திராவிடம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் கும்பலுக்கு வரும் தேர்தல் முடிவு கட்டும் என கடுமையாக சாடியுள்ளார்.

error: Content is protected !!