News May 7, 2024
மனைவி மீது சந்தேகம்: நண்பனை கொலை செய்த கொடூரம்

குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் குமார் (23). இவர் கடந்த வெள்ளிக்கிழமை வட்டப்பாறை அரசு பள்ளி அருகே சடலமாக மீட்கப்பட்டார். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த மனோஜ் (24) என்பவரை இன்று கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மனைவி மீது சந்தேகம் கொண்டு தனது நண்பனான குமாரை கொலை செய்ததாக மனோஜ் வாக்குமூலம் அளித்துள்ளாா்.
Similar News
News January 14, 2026
வேலூர்: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனே Call..! (CLICK)

வேலூர் மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (0416-2220893) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 14, 2026
வேலூர்: நிரந்தர பந்தல் அமைக்க ரூ.3 லட்சம் மானியம்!

வேலூர் மக்களே.., பீர்க்கன், பாகல், புடலை உள்ளிட்ட கொடி வகை காய்கறிகளுக்கு பந்தல் அமைக்க செலவு அதிகம் என்ற கவலை இனி வேண்டாம். தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நிரந்தர பந்தல் அமைத்து கொடிவகை காய்கறிகள் / பழங்களை சாகுபடி செய்ய ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் அருகில் இருக்கும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க!
News January 14, 2026
வேலூர் சிறையில் இருந்து பரோலில் சென்ற 16 கைதிகள்

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் மத்திய சிறையில் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட பரோல் கேட்டு 30-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் சிறைத்துறை உயர் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டது. இதில் நேற்று மதியம் வரை 16 கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர்கள் சிறையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


