News January 25, 2026

கடலூர்: திருட்டு வழக்கில் தொடர்புடையவர் கைது

image

அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான காவல்துறையினர் நேற்று (ஜன.24) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தேவபாலன் என்பவரை விசாரணை செய்ததில், அவர் பல பகுதிகளில் மின்மாற்றிகளை திருடிய வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News January 26, 2026

கடலூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

கடலூர் மாவட்ட மக்கள் இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News January 26, 2026

கடலூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜனவரி 26) காலை 8.30 மணி நிலவரப்படி, பரங்கிப்பேட்டை 28 மில்லி மீட்டர் மழை, கொத்தவச்சேரி 25 மி.மீ மழை, குப்பநத்தம் 17 மில்லி மீட்டர் மழை, சிதம்பரம் 16.5 மில்லி மீட்டர் மழை மற்றும் புவனகிரியில் 16 மில்லி மீட்டர் மழை என மாவட்டம் முழுவதும் 286.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News January 26, 2026

கடலூர்: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

image

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <>இங்கே க்ளிக்<<>> செய்யுங்க. SHARE IT

error: Content is protected !!