News January 25, 2026
நீலகிரியில் உச்சகட்ட பாதுகாப்பு!

குடியரசு தின விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள், லாட்ஜ் காட்டேஜ்களில் தீவிர சோதனை நடைபெற்ற வருகிறது. மேலும் வழிபாட்டுத்தலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாளை வரை பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுவர்.
Similar News
News February 7, 2026
நீலகிரி: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

நீலகிரி மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க அதிகம் ஷேர் பண்ணுங்க!
News February 7, 2026
நீலகிரியில் சிறுத்தை பலி!

நீலகிரி மாவட்டம் குந்தா, உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், குந்தா மஞ்சக்கொம்பை பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த சிறுத்தையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். அதன் பின்னர், சிறுத்தையின் உடல் அதே இடத்திலேயே எரியூட்டப்பட்டது.
News February 7, 2026
நீலகிரி:இரவு ரோந்து போலீஸ் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (6/2/26) இரவு முதல் நாளை காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.


