News January 25, 2026

திண்டுக்கல்லில் பெண்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

image

திண்டுக்கல் அருகே பாலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சின்னையா. இவரது மனைவி சுப்புலட்சுமி, மகள் கருத்தம்மாள், உறவினர் பஞ்சவர்ணம் ஆகிய 3 பேரும், நேற்று இரவு வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் திடீரென புகுந்த மர்ம கும்பல், 3 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து திண்டுக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 5, 2026

நத்தம் அருகே பெண்ணுக்கு அரிவாள்வெட்டு

image

நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி விஜயாவுக்கும், அதே ஊரை சேர்ந்த ஜெகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ஜெகன் மீண்டும் முன்விரோதம் காரணமாக விஜயாவை தலையில் அரிவாளால் வெட்டியும், ராமனை கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து ராமன் அளித்த புகாரில் ஜெகன் மற்றும் பிரபு ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

News February 5, 2026

திண்டுக்கல்: சைபர் மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் எண் கூறி வங்கி கணக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாகவும், முகவரிக்கு சட்டவிரோத பொருட்கள் வந்துள்ளதாகவும் கூறி வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடி புகார்களுக்கு சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 5, 2026

திண்டுக்கல்: சைபர் மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் எண் கூறி வங்கி கணக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாகவும், முகவரிக்கு சட்டவிரோத பொருட்கள் வந்துள்ளதாகவும் கூறி வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடி புகார்களுக்கு சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!