News May 7, 2024
புதுச்சேரி: +2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை தற்கொலை

நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஆதேஷ். விடுமுறைக்காக கிருமாம்பாக்கம் பனித்திட்டு சுனாமி குடியிருப்பில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். +2 தேர்வில் ஆதேஷ் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் அறையில் இருந்த ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.
Similar News
News December 30, 2025
புதுவை: பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

காரைக்கால் நகர போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தைக்கால் தெரு பின்புறம் உள்ள பொது இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் காரைக்காலைச் சேர்ந்த திருமுருகன், சக்திவேல், ராமன், குருபிரசாத், விஜய், திரௌபதி வெள்ளைசாமி, சவுந்தரராஜன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News December 30, 2025
புதுவை: குளத்தில் மூழ்கிய கூலித்தொழிலாளி பலி

காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(29). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் பெரியகாலாப்பட்டு முருகன் கோவில் குளத்தில் மீன் பிடித்தபோது திடீரென குளத்தில் தவறி விழுந்து மூழ்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காலாப்பட்டு தீயணைப்பு வீரர்கள், ராஜாவை தேடினர். இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் ராஜாவை நேற்று மதியம் குளத்தில் இருந்து சடலமாக மீட்டனர்.
News December 30, 2025
புதுவை: ஆசிரியர் தகுதி தேர்வு முடிவை சமர்பிக்க உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர், தேர்ச்சி பெறாதவர்கள்
விபரங்களை சமர்பிக்க கல்விதுறை உத்தரவு. புதுவை கல்வித்துறை
இணை இயக்குனர் வெர்பினா ஜெயராஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்ற ஆசிரியர்கள், தகுதி பெறாத ஆசிரியர்கள் விபரங்களை வரும் 31-ந் தேதி முன்பாக கூகுள் படிவம் மூலம் கல்வித்துறையில் சமர்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


