News January 25, 2026
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அல்லாத நபர்கள் போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளும் வியாபாரிகள், நெல் கொள்முதல் பணியாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டால் கட்டணமில்லா எண்ணிற்கு 8005993540 புகார் அளிக்கலாமெனவும் கூறியுள்ளார்.
Similar News
News February 17, 2026
தஞ்சாவூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 17, 2026
தஞ்சாவூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

தஞ்சாவூர் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News February 17, 2026
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க பட்ஜெட்

தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசித்தார். அதன்படி தமிழகத்தில் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்படும் என்றும், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


