News January 25, 2026
மகளிர் உரிமைத் தொகை.. CM ஸ்டாலின் ஹேப்பி நியூஸ்

1.30 கோடி பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக CM ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார். இதன்படி, ஒவ்வொரு மகளிரும் இதுவரை ₹29,000 பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். இதனை தங்களது அண்ணன் கொடுக்கும் மாதாந்திர சீர் என ஒவ்வொரு மகளிரும் கூறுவதாகவும் ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்நிலையில், விரைவில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
Similar News
News February 3, 2026
வானதிக்கு அழுத்தம் கொடுக்கிறாரா SP.வேலுமணி?

கோவை தெற்கின் சிட்டிங் MLA-வாக இருக்கும் வானதியை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுமாறு SP.வேலுமணி அழுத்தம் கொடுப்பதாக தகவல் கசிந்துள்ளது. 2016-ல் கோவை தெற்கில் அதிமுகவின் அம்மன் அர்ஜுனன் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், 2021-ல் வானதி அத்தொகுதியை கேட்கவே, அம்மன் அர்ஜுனன் வடக்கில் போட்டியிட்டார். எனவே, வரும் தேர்தலில் அம்மன் அர்ஜுனனை மீண்டும் தெற்கில் நிற்க வைக்க SP.வேலுமணி திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
News February 3, 2026
தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகல்

சிங்காநல்லூர் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் இப்போது தன்னால் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, காலமும் நேரமும்தான் முடிவு செய்யும் என சூசகமாகவே பதிலளித்தார்.
News February 3, 2026
எதிர்க்கட்சிகளின் அமளியால் லோக் சபா ஒத்திவைப்பு

இந்திய – அமெரிக்க வர்த்தக விவகாரம் குறித்து பேச வேண்டும் என வலியுறுத்தி லோக் சபாவில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் இருக்கை அருகே சென்ற காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி MP-க்கள், பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனையடுத்து 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.


