News January 25, 2026
தேர்தலில் தவெக தனித்து போட்டியா? KAS சூசகம்

திமுகவும் அதிமுகவும் தங்கள் கூட்டணியை கிட்டத்தட்ட இறுதிசெய்துள்ள நிலையில், இன்னும் தவெக தரப்பில் கூட்டணி முடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையில், விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் என்று தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, தவெகவில் இரண்டு லட்சம் பேருக்கு பதவி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் தவெக தனித்தே களம் காணும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Similar News
News April 2, 2026
பெரம்பூர் ஸ்டார் தொகுதியா? திலகபாமா பதில்

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவனாக யாரும் வரக்கூடாது என நினைக்கும் திமுக அரசு அழித்தொழிக்கப்பட வேண்டும் பெரம்பூர் பாமக வேட்பாளர் திலகபாமா கூறியுள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு பின் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டும், பெரம்பூரை மாற்றவும்தான் இங்கு போட்டியிடுகிறேன் என தெரிவித்துள்ளார். விஜய் குறித்த கேள்விக்கு, மக்களுக்கு எல்லா வசதியும் கிடைத்தால்தான் அது ஸ்டார் தொகுதி எனவும் பேசியுள்ளார்.
News April 2, 2026
‘நான் சாகப் போகிறேன்.. மன்னிச்சிருங்க’

குற்ற உணர்ச்சி ஒரு உயிரை குடித்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பிரதீபா(29) மாடிக்குச் சென்ற நேரத்தில், வீட்டில் இருந்த அவரது 11 மாத குழந்தை வாளித் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. தனது அலட்சியமே குழந்தையின் இறப்புக்கு காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த பிரதீபா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவரிடம் மன்னிப்பு கேட்டு அவர் எழுதிய கடிதத்தை மீட்டு போலீஸ் விசாரித்து வருகிறது.
News April 2, 2026
இந்திய தேர்தல் வரலாற்றில் இடம் பெற்ற மொடக்குறிச்சி!

1996-ல் மொடக்குறிச்சி தொகுதியில் 1,033 வேட்பாளர்கள் போட்டியிட்டது இந்தியாவில் அபூர்வமான நிகழ்வாகும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய சங்கங்கள் இதனை செய்தன. 65 பக்க வாக்குச்சீட்டு தேவைப்பட்டதால் இத்தொகுதியில் ஒரு மாதத்திற்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு, வேட்பாளர்களுக்கு வைப்புத்தொகையை உயர்த்த தேர்தல் ஆணையம் சீர்திருத்தம் செய்தது கவனிக்கத்தக்கது.


