News January 25, 2026

ராணிப்பேட்டையில் பலத்த பாதுகாப்பு

image

77-வது இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், உத்தரவின் பேரில் சுமார் 600 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், நாசவேலை தடுப்பு குழுவினர் மூலம் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Similar News

News January 27, 2026

ராணிப்பேட்டை: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

image

ராணிப்பேட்டை உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள்.(SHARE)

News January 27, 2026

ராணிப்பேட்டை பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 27, 2026

ராணிப்பேட்டை நிறுவனங்களுக்கு அபராதம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று(ஜன.26) குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள், கடைகள், உணவு நிறுவனங்கள் போன்றவைகளை தொழிலாளர் உதவி கமிஷனர் மு.வரதராஜன் தலைமையில் ஆய்வு செய்தனர். இதில், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்களுக்கு இணக்க கட்டண அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!