News May 7, 2024
3ஆம் கட்டத் தேர்தல்: 50% வாக்குப்பதிவு

3ஆவது கட்டத் தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 50% வாக்குகள் பதிவாகியுள்ளது. மக்களவைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 3ஆவது கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலையில் வாக்குப்பதிவு தொடங்கியது முதல் நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனர். மதியம் 3 மணி நிலவரப்படி, தேர்தலில் 50.71% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Similar News
News August 22, 2025
நடிகை ரித்விகாவின் திருமணம் தள்ளி போனது..!

பிக்பாஸ் 2-வது சீசன் வின்னரும் பிரபல நடிகையுமான ரித்விகாவின் திருமணம் கடைசி நேரத்தில் தள்ளி போயுள்ளது. இவருக்கும் வினோத் லட்சுமணன் என்பவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆக. 27-ல் திருமணம் நடைபெற இருந்த நிலையில், குடும்ப சூழல் காரணமாக ரித்விகா தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கபாலி, மெட்ராஸ், ஒருநாள் கூத்து உள்ளிட்ட பல படங்களில் ரித்விகா நடித்துள்ளார்.
News August 22, 2025
BREAKING: இனி ₹2 லட்சம்.. தமிழக அரசு அறிவிப்பு

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான இழப்பீடு தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விபத்து மரணத்திற்கான இழப்பீட்டை ₹1 லட்சத்தில் இருந்து ₹2 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. விபத்தில் உடல் உறுப்பை இழந்தால் இனி ₹1 லட்சம்(முன்பு ₹20 ஆயிரம்) வழங்கப்படும். அதேபோல், இனி இயற்கை மரணத்திற்கு ₹30 ஆயிரமும், இறுதிச் சடங்கு செய்ய ₹10 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News August 22, 2025
மீண்டும் வருகிறது ‘டிக் டாக்’?

ஒருகாலத்தில் இந்தியர்களை பைத்தியமாக்கியது, டிக் டாக் செயலி. பாதுகாப்பு காரணங்களுக்காக 5 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு இதை தடைசெய்தது. இந்நிலையில் இந்தியாவில் மீண்டும் டிக் டாக் வரலாம் என தகவல் உலா வருகிறது. டிக் டாக் வெப்சைட் இந்தியாவில் இன்னும் ஆக்டிவாக இருப்பதாகவும், பலரால் அதை ஆக்சஸ் செய்ய முடிவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், டிக் டாக் செயலி அவைலபிளாக இல்லை. நீங்க டிக் டாக்கை வரவேற்பீர்களா?