News January 25, 2026
கொல்லிமலை அருகே பள்ளி மாணவன் பலி

கொல்லிமலை அரியூர் நாடு ஊராட்சி மேல்கலிங்கம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தம்பதி சிவப்பிரகாசம்-சரஸ்வதி. இவர்களது இளைய மகன் ஆகாஷ் (14) 9-ஆம் வகுப்பு மாணவன். இவன் மோட்டார் சைக்கிளில் தெம்பலம் கிராமம் நோக்கி சென்றபோது தனியார் பள்ளி வேன் மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர், சேலம் GH-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 7, 2026
நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும், அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும் இருக்கும், காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும், அதிகபட்சமாக 80 சதவீதமாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News February 7, 2026
நாமக்கல்லில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)
News February 7, 2026
நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.5 சரிவு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.115 ஆக குறைந்து உள்ளது. அதே போல் ரூ. 72-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை கோழி, நேற்று கிலோவுக்கு ரூ. 2 குறைந்து ரூ. 70- ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


