News January 25, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (ஜன-25) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 11, 2026

கிருஷ்ணகிரி: கோயிலுக்கு சென்றவர் பரிதாப பலி!

image

ஓசூர் அடுத்த பேகேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் பிப்-09 அன்று அருகே உள்ள எல்லம்மாள் கோவிலுக்கு செல்லும் போது வழியில் விஷப்பாம்பு கடித்தது. பின்னர் அவர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிப்-10 சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 11, 2026

கிருஷ்ணகிரி: எலி பேஸ்ட் சாப்பிட்டு குழந்தை பலி!

image

பர்கூர் அடுத்த சென்னப்பா நகரை சேர்ந்த உதய்குமார், மகன் தன்விக் (2). கடந்த பிரவரி 5-ம் தேதி சிறுவன் வீட்டில் வைத்திருந்த எலி பேஸ்டை கோல்கேட் என நினைத்து சாப்பிட்டுள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர் சிறுவனை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் பிப்-9-ம் தேதி சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 11, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நேற்று (10.02.2026) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!