News May 7, 2024
கெத்து காட்டிய அரசு பள்ளி மாணவர்கள்

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 90 பள்ளிகளைச் சேர்ந்த 8218 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் குறிப்பாக 54 அரசு பள்ளிகளில் மட்டும் 2,323 மாணவர்களும், 2214 மாணவிகளும் ஆக மொத்தம் 4,537 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 2,199 மாணவர்களும், 2138 மாணவிகளும் என மொத்தம் 4337 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசுப்பள்ளி தேர்ச்சி சதவீதம் 95.59 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News July 6, 2025
அரியலூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அரியலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் ஜூலை 7ம் தேதி முதல் நடைபெறுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ளோர், முகாமில் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இம்முகாம்களில் மட்டுமே பெறப்படும். பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
News July 6, 2025
அரியலூர் இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் (ஜூலை 5) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன. அவரச காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம்.
News July 5, 2025
அரியலூர்: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் அரியலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!