News January 25, 2026

தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, இன்று (ஜன.24) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 2, 2026

தென்காசி: கிணற்றில் மிதந்த பெண் சடலம்

image

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள கிணற்றில் நேற்று 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக மிதந்தார். தவலறிந்து வந்த கடையநல்லூர் போலீசார் மற்றும் கடையநல்லூர் தீயணைப்பு துறையினர் பெண்ணின் உடலை மீட்டு, கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பெண் யார்? தற்கொலையா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 2, 2026

தென்காசி: தொடர் கொள்ளை; 3 பேர் கைது!

image

கடையம் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து வீட்டில் கடந்த 9-ம் தேதி 19 பவுன் தங்க நகைகள், ரு.30,000, பொட்டல்புதூரை சேர்ந்த முஸ்திரி பேகம் என்பவரது வீட்டில் ரூ.26,000 திருடு போனது. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி வீட்டில் ரூ.4,000 திருடு போனது. இதில் போலீசார் 320 CCTV கேமராக்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து நேற்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிவலிங்கம், சுரேஷ், சிவக்குமார் ஆகிய மூவரை கைது செய்தனர்

News February 1, 2026

தென்காசி : இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

தென்காசி மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு<>, Aadhaar <<>>மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!