News January 24, 2026
வெறும் ₹1000-ல் குழந்தையின் Future-ஐ பாதுகாக்கும் திட்டம்!

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை காக்க மாதம் ₹1000-ஐ NPS வாத்சல்யா திட்டத்தில் முதலீடு செய்யலாம். 18 ஆண்டுகள் முதலீடு செய்யும் பட்சத்தில், வட்டி எல்லாம் சேர்த்து மொத்த தொகை ₹8,48,000-ஆக இருக்கும். உங்கள் குழந்தைக்கு 18 வயதான பிறகு 80% தொகையை எடுத்து அவர்களின் படிப்பு செலவுக்கு பயன்படுத்தலாம். eNPS portal-க்கு சென்று திட்டத்தில் சேருங்கள். எல்லாருக்கும் பயன்படும், SHARE THIS.
Similar News
News February 14, 2026
தவெகவுக்கு ஊர்க்காவல் படை திடீர் ஆதரவு.. ஏன்?

ஊர்க்காவல் படையினருக்கு பணி நாள்கள் அதிகரிக்கப்பட்டு, சம்பளமும் உயர்த்தப்படும் என 2021 தேர்தலில் அளித்த வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இந்நிலையில், வேலை நாள்களை 15-லிருந்து 25, 1 நாள் சம்பளத்தை ₹560-லிருந்து ₹1,000 ஆகவும் உயர்த்தும் கோரிக்கையை தவெக, தனது தேர்தல் வாக்குறுதியில் இடம்பெறச் செய்தால், அவர்களுக்கு ஆதரவளிக்க உள்ளதாக 16,500 ஊர்க்காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
News February 14, 2026
நீங்க எந்த நேரத்தில் காலை உணவை சாப்பிடுறீங்க?

அலுவலகம் செல்லும் அவசரகதியில் பலரும் காலை உணவை தவிர்ப்பார்கள். ஆனால், இது உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். காலை 7 – 8 மணிக்குள் காலை உணவை சாப்பிட வேண்டும். மிக தாமதமாக சாப்பிடுவது நீரிழிவு, இதய நோய்களுக்கு வழிவகுக்கும். வளர்சிதை மாற்றமும் தடைபடும். காலை உணவுக்கும், லஞ்சுக்கும் இடையே குறைந்தது 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். SHARE.
News February 14, 2026
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ₹2,000.. REQUEST

பொங்கல் பரிசு வழங்கப்பட்ட 2.22 கோடி ரேஷன் கார்டுகளுக்கும் <<19125836>>கோடைக்கால சிறப்பு தொகுப்பான<<>> ₹2,000-ஐ வழங்க வேண்டும் என பலரும் TN அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மகளிர் உரிமைத்தொகை பெறும் 1.31 கோடி குடும்பங்களுக்கு மட்டும் வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னதாக இந்தாண்டு மட்டும்தான் கோடைக்காலம் வருகிறதா என அதிமுக, தவெக சாடியிருந்தது கவனிக்கத்தக்கது.


