News January 24, 2026
கள்ளக்குறிச்சியில் கரண்ட் தாக்கியதால் பரபரப்பு!

எலவனாசூர்கோட்டை மின் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட கொட்டையூர் பகுதி, புகைப்பட்டியைச் சேர்ந்த சுந்தர் (28) என்பவர் பழுது சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சுந்தர் மீது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார். அங்குள்ள பொதுமக்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
Similar News
News February 12, 2026
கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

சின்னசேலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கல்லாநத்தம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு போலீஸ் ராமதாஸ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஞானவேல் (53) என்பவர் 2.5 லிட்டர் சாராயம் வைத்து விற்றதையடுத்து அவரை கைது செய்தனர். சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
News February 11, 2026
அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.2.25 லட்சம் மதிப்புள்ள உடலின் ரத்த ஆக்சிஜன் செறிவை அளவிடும் கருவிகள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. அரசு மருத்துவர்களிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர் பொன்னரசு இன்று வழங்கினார்.
News February 11, 2026
கள்ளக்குறிச்சி: இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

கள்ளக்குறிச்சி மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!


