News January 24, 2026

ராணிப்பேட்டை பெற்றோர் கவனத்திற்கு!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். *மறக்காம ஷேர் பண்ணுங்க*

Similar News

News February 11, 2026

ராணிப்பேட்டையில் கூண்டோடு கைது!

image

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (பிப்.10) மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பணி பாதுகாப்பு சட்டம், மேம்படுத்தப்பட்ட ஊதியம், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம், பணி சுமை குறைத்தல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.

News February 11, 2026

ராணிப்பேட்டை: 100 ரூபாய்க்கு ஆசை; அடி, உதைத்த மக்கள்!

image

திமிரியில் ரூ.100 கொடுத்தால் மருத்துவ காப்பீடு தருவதாக கூறி 5 பேர் கொண்ட குழு வலம் வந்தது. இதே போல் கணியனூர் ஊராட்சியில் பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்ட போது சந்தேகமடைந்த வாலிபர் ஒருவர் காப்பீடு அட்டையை வாங்கி ஸ்கேன் செய்ததில் அது போலி என தெரிய வந்தது. இதை அறிந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இருவரையும் அடித்து உதைத்து சிறை பிடித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 11, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.10) இரவு முதல் இன்று (பிப்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!