News January 24, 2026
தூத்துக்குடியில் 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தியதாக, சுரேஷ்குமார் (42), வடிவேல்முருகன் (44), மகேஷ்வரன் (30) ஆகிய மூவரை புதியம்புத்தூர் போலீசார் கைது செய்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டார்.
Similar News
News February 11, 2026
தூத்துக்குடி : அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

தூத்துக்குடி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த<
News February 11, 2026
தூத்துக்குடி: இளைஞர்களுக்கு கலெக்டரின் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலை வாய்ப்பு குறித்து பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதில் விருப்பம் உள்ள தகுதியான இளைஞர்கள் இத்தகைய பயிற்சிகள் பெற்று பயனடைய தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
மணியாச்சி ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சியில் இருந்து கடம்பூர் செல்லும் ரயில் பாதையில் நேற்று இரவு 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு ரயில் பாதையில் பரிதாபமாக இறந்து கிடந்தார். இவர் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் ரயிலில் அடிபட்டதாக தெரிகிறது. இது சம்பந்தமாக தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


