News January 24, 2026
பூத் நிலை அலுவலர்களுக்கு ECI எச்சரிக்கை

SIR பணிகளில், வாக்காளர் பட்டியலின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை பாதிக்கப்படக்கூடாது என மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கு ECI உத்தரவிட்டுள்ளது. SIR பணிகளில் தவறு நடந்தால் பூத் நிலை அலுவலர்களை (BLO) இடைநீக்கம் செய்வதோடு துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், குற்றச்செயல் தொடர்பான வழக்குகளில் FIR பதிவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 10, 2026
முட்டையின் மஞ்சள் கரு கொழுப்பை அதிகரிக்குமா?

முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகமாக இருப்பதாக நம்பி பலரும் வெள்ளைக்கருவை மட்டுமே சாப்பிடுகின்றனர். ஆனால், மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதாகவும், இதனால் முழு முட்டையையும் சாப்பிட வேண்டும் எனவும் டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும், மஞ்சள் கரு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
News February 10, 2026
பாம்பாக மாறிய பெண்.. படுக்கையில் அதிர்ச்சி

உத்தரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில், அவர் நாகினியாக மாறிவிட்டதாக பெற்றோர் கூறியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு அந்த பெண்ணின் படுக்கையில் கிடந்த 5 அடி நீள பாம்புத் தோலே காரணம் என தெரியவந்தது. ஊரே பீதியில் உறைந்த நிலையில், தனது காதலனுடன் தப்பியோடுவதை திசைதிருப்பும் முயற்சியாக அந்தப் பெண் வேண்டுமென்றே பாம்புத் தோலை விட்டுச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
News February 10, 2026
முகத்தில் முடி வளருதா? கவலை வேண்டாம் TRY THIS..

சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் முடிகளை அகற்றுவதில் சர்க்கரை + தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. ➤இதற்கு 1 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் சர்க்கரையை எடுத்துகொள்ளுங்கள் ➤அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும் ➤பிறகு சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைத்து ஆறியவுடன், முடிகள் உள்ள இடத்தில் தடவுங்கள் ➤வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்துவந்தால் முகத்தில் உள்ள முடி முற்றிலுமாக உதிர்ந்துவிடும். SHARE.


