News January 24, 2026

மதுரை: மகன் கண்முன்னே தாய் பலியான சோகம்.!

image

திருப்பரங்குன்றம் அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் மனைவி மீனாட்சி . நேற்று இவரது மகன் கொப்பையன் டூவீலரில் பின்னால் அமர்ந்து திருமங்கலம் சாலையில் சென்றுள்ளார். அப்போது கற்பகநகர் வேகத் தடையில் டூவீலர் ஏறி இறங்கிய போது, மீனாட்சி தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இதுக்குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை.

Similar News

News March 8, 2026

மதுரை: வாடகை வீட்டில் இருப்போர் தெரிந்து கொள்ளவும்

image

மதுரை மக்களே; நீங்கள் வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா..? 3 மாதத்துக்கு முன்னாடியே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா..? இனி இதை பண்ணுங்க… உங்களுக்காகவே (TNRRLA, 2017) என்ற சட்டத்தின் கீழ் நெல்லை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் 9445000476, 9445000478, 9445000477 புகாரளியுங்க.SHARE பண்ணுங்க

News March 8, 2026

மதுரை: 800 போட்டிகளில் பிடிபடாத காளை மரணம்

image

பாலமேடு, பொம்மிநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோயில் ஜல்லிக்கட்டு காளை ‘சண்டியர்’ வயது முதிர்வால் இறந்தது. 24 ஆண்டுகளாக பல இடங்களில் நடந்த 800-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்று பிடிபடாத காளையாக பல பரிசுகள் வென்று கிராமத்திற்கு பெருமை சேர்த்தது. காளைக்கு கிராம மக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தி மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

News March 8, 2026

மதுரையில் அரிவாள் வெட்டு; சிறுவன் கைது

image

மதுரையை சேர்ந்த முனியாண்டி (52) வீட்டின் அருகே 17 வயது சிறு­வன் குடி­போ­தை­யில் ரகளை செய்தார். இதை அவர் தட்டி கேட்­க, ஆத்தி­ர­மடைந்த சிறு­வன் அரி­வாளை எடுத்து வந்து முனியாண்டியை சர­மாரியாக வெட்டி­னார். முனியாண்டியை தனியார் மருத்து­வ­ம­னையில் சிகிச்­சைக்­காக சேர்த்­த­னர். ஜெய்ஹிந்த்பு­ரம் போலீசார் சிறு­வனை கைது செய்து சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

error: Content is protected !!