News May 7, 2024

அடுத்த 2 நாள்களுக்கு கனமழை

image

தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை (மே 8), நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 14 மாவட்டங்களிலும், மே 9ஆம் தேதி தென்காசி, நெல்லை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

Similar News

News August 23, 2025

விரைவில் இந்தியாவில் OpenAI அலுவலகம்

image

AI கருவிகளின் புழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், OpenAI-யின் புதிய அலுவலகத்தை இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் திறக்கவுள்ளதாக, அதன் CEO சாம் ஆல்ட்மேன் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் ChatGPT பயனர்கள் 4 மடங்கு அதிகரித்துள்ளதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், விரைவில் இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நீங்க AI யூஸ் பண்றீங்களா?

News August 23, 2025

சளி, இருமலை விரட்டும் தூதுவளை தேநீர்!

image

மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல், மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் தூதுவளை தேநீரைப் பருகலாம் என ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைப்பிடி தூதுவளை இலை, சுக்கு, திப்பிலி, மிளகு, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைக்கவும். பின் வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான தூதுவளை தேநீர் ரெடி. இதை எப்போது வேண்டுமென்றாலும் பருகலாம்.

News August 23, 2025

தவெக தொண்டர்கள் மரணம்.. சர்ச்சையில் சிக்கிய விஜய்

image

மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் மூச்சு திணறியும், பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கியும், விபத்தில் சிக்கியும் 3 தவெக தொண்டர்கள் உயிரிழந்தனர். ஆனால், அக்கட்சியின் தலைவர் விஜய், ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது பெரும் சர்ச்சையாகியுள்ளது. விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டின்போதும் உயிரிழந்த முக்கிய நிர்வாகிகளுக்கு கூட அவர் அஞ்சலி செலுத்தவில்லை. இது அப்போதே சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!