News January 24, 2026
தூய்மை பணியாளர் குறைகேட்பு நாள் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி தலைமையில் வருகிற (30-01-2026) அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தரைத்தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த குறைகேட்பு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்தார்.
Similar News
News February 22, 2026
திருப்பத்தூர்: மனைவியால் உயிருக்கு போராடும் கணவன்!

ஜோலார்பேட்டை அருகே ஒட்டப்பட்டி சேர்ந்த பெரியண்ணன் என்பவர் நேற்று (பிப்.21) தனது வீட்டில் இருந்து போது மனைவியிடம் தகராறு ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த பெரியண்ணன் தனது வீட்டின் அருகே உள்ள டாஸ்மார்க் மதுபான கடை அருகே எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.
News February 22, 2026
திருப்பத்தூர்: தூக்கி வீசப்பட்ட இருவர்; சுக்குநூறான வண்டி!

ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் இவர் மது போதையில் நேற்று (பிப்.21) இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இடையம்பட்டி அருகே சாலை நடந்து சென்ற கார்த்திகேயன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயம் அடைந்தனர் மேலும், அந்த இருசக்கரவாகனம் சுக்குநூறானது. இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 22, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.21) இரவு முதல் இன்று (பிப்.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


