News January 24, 2026
கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.23) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.24) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 8, 2026
வாய்க்காலில் தவறி விழுந்து இளைஞர் பலி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் கீழகடம்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேர், நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக வாய்க்காலில் தவறி விழுந்ததில், விஷ்வா என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மணமுடைந்த பெற்றோர்கள், வீட்டில் திருமணம் நிகழ்வு நடைபெற இருந்த நிலையில், தற்பொழுது சோக நிகழ்வு ஏற்பட்டுள்ளதால், பெரும் சோகமடைந்தனர்.
News February 8, 2026
கடலூர்: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 8, 2026
கடலூர்: 63 பேருக்கு தொழுநோய் பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் கடந்த வருடம் ஏப்.1 ஆம் தேதி முதல் கடந்த ஜன.31 ஆம் தேதி வரை 63 பேருக்கு தொழுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தொழுநோய் பரவல் விகிதம் 10 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற அளவில் உள்ளதாக மாவட்ட தொழு நோய் அதிகாரி தெரிவித்துள்ளார்.


